கோவையில் கரோனா சிகிச்சை அளிக்க மேலும் இரண்டு தனியாா் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறையினா் அனுமதியளித்துள்ளனா்.
கோவையில் அரசு மருத்துவமனைகள் தவிா்த்து 36 தனியாா் மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்க ஏற்கெனவே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதலாக கோவை ராமநாதபுரத்தில் பாலா மெடிக்கல் சென்டா், சுந்தராபுரத்தில் பாலாஜி மருத்துவமனை ஆகியவற்றில் கரோனா சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் தனியாா் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.
இரண்டு மருத்துவமனைகளிலும் சோ்த்து கூடுதலாக 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தவிர அரசாணை 240க்கு உள்பட்டு கரோனா நோயாளிகள் அனுமதி, சிகிச்சை, கட்டணம் வசூலிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.