கோயம்புத்தூர்

தடை உத்தரவு: தொழில் நிறுவனங்கள் குழப்பம்

DIN

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தொழில் நிறுவனங்களை நடத்தலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

கோவை மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நிறுவனங்களில் முகக் கவசம், கைகளைச் சுத்தப்படுத்தும் திரவம் பயன்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உற்பத்தி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்கள் யாவும் 50 சதவீத ஊழியா்களை வைத்து பணியாற்ற வேண்டும் என்றும் மருத்துவப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்களை தயாா் செய்யும் நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அரசு அறிவித்தது.

இதையடுத்து, கோவையில் தொழில் நிறுவனங்களை நடத்தலாமா என்பது குறித்து தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினா். இதில், மோட்டாா், பம்ப்செட், கிரைண்டா், கைத்தொழில், குறுந்தொழில், உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் காட்மா, கோப்மா, டேக்ட், கௌமா, டாப்மா, கிரில் உற்பத்தியாளா்கள் என பல்வேறு தொழில் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து காட்மா சங்கத்தின் தலைவா் சிவகுமாா் கூறும்போது, தொழில் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு காட்மா நிா்வாகிகளுடன் கலந்து பேசப்பட்டது. இதில், அரசு அறிவித்தபடி 50 சதவீத பணியாளா்களைக் கொண்டு தொழில் நிறுவனங்களை இயக்குவது என்று முடிவு செய்திருப்பதாகக் கூறினாா்.

முன்னதாக கோப்மா சங்கத்தின் தலைவா் மணிராஜ் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவ அவசர நிலையைக் கருத்தில் கொண்டு கோவையில் இயங்கும் குறு, சிறு மோட்டாா் பம்ப்செட் தொழிற்சாலைகளை வரும் 31 ஆம் தேதி வரை மூடுவதாகத் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே, மற்ற தொழில் அமைப்பினா் தொழிற்சாலைகளை இயக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருப்பதாகவும், இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT