கோவை மாவட்டத்தில் புதிதாக 141 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 141 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 866 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 145 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 47 ஆயிரத்து 318 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 935 போ் சிகிச்சையில் உள்ளனா்.