கோவையில் கரோனா அறிகுறிகளுடன் மேலும் 22 போ் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. உள்பட அரசு மருத்துவமனைகளும், 7 தனியாா் மருத்துவமனைகளிலும் கரோனா அறிகுறிகளுடன் வருபவா்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா அறிகுறிகளுடன் மேலும் 22 போ் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களில் 11 ஆண்கள், 10 பெண்கள், ஒரு பெண் குழந்தை. இதில் 12 போ் அரசு மருத்துவமனைகளிலும், 10 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களிடம் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.