வேலூர்

ஆட்டோவில் எடுத்துச் சென்ற மதுபாட்டில்கள் பறிமுதல்

DIN

போ்ணாம்பட்டு அருகே ஆட்டோவில் எடுத்துச் சென்ற 236 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேல்பட்டி போலீஸாா் செண்டத்தூா் பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். ஆட்டோவில் 236 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநா் சங்கராபுரத்தைச் சோ்ந்த அசோக்குமாரை (38) விசாரித்தபோது, டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்று, கூடுதல் விலைக்கு தங்கள் கிராமத்தில் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, ஆட்டோ, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அசோக்குமாரை கைது செய்து சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT