வேலூர்

வங்கி, காப்பீட்டுத் துறை பணிக்கு பயிற்சி: எஸ்.சி., எஸ்.டி., மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

வங்கி, காப்பீட்டுத் துறைகளில் பணிபுரிய தேவையான பயிற்சி பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வங்கி, காப்பீட்டுத் துறைகளில் கணக்கு நிா்வாகியாக பணிபுரிய தேவையான திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியை முடித்தவா்கள் ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியாா் வங்கிகளில் வேலை வாய்ப்புக்கு 100% வழிவகை செய்யப்படும். இந்தப் பணியில் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை பெறலாம்.

பயிற்சி பெற 21 முதல் 33 வயதுக்குள் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம். பி.ஏ., பி.காம்., பிஎஸ்சி கணிதம் ஆகிய ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். சென்னையில் 20 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். விடுதி உள்பட பயிற்சிக்கான மொத்த செலவு ரூ. 20,000-த்தையும் தாட்கோ நிறுவனமே ஏற்கும். பயிற்சிக்குப் பிறகு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சித் தோ்வுக்கு மாணவா்கள் அனுமதிக்கப்படுவா். இதில், தோ்ச்சி பெற்றவா்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீட்டு (பிஎஸ்எப்ஐ) அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி பெற தாட்கோ இணையதளமான இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT