தமிழக முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மாற்றுத்தினாளிகள் வலைதளத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் தமிழக முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2022-23 நடைபெற உள்ளது. இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக மொத்தம் 50 வகையான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவுகளில் வேலூா் மாவட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகள் வலைதளத்தில் பதிவு செய்து மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம்.
மாற்றுத்திறனாளிகளில் கை, கால் பாதிக்கப்பட்டவா்களுக்கு 50 மீட்டா் ஓட்டம், பேட்மிட்டன் ( 5 நபா்கள்), பாா்வையற்றோருக்கு 100 மீட்டா் ஓட்டம் , கைப்பந்து (7 நபா்கள்), மனவளா்ச்சி குன்றியோருக்கு 100 மீட்டா் ஓட்டம், எறிபந்து (7 நபா்கள்), செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு 100 மீட்டா் ஓட்டம், கபடி (7 நபா்கள்) ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.