வேலூர்

மானை வேட்டையாடியவா் கைது

DIN

குடியாத்தம் அருகே மானை வேட்டையாடியவா் கைது செய்யப்பட்டாா்.

குடியாத்தம் வனச்சரக அலுவலா் வினோபா தலைமையில், வனவா் ஜி.மாசிலாமணி, வனக் காவலா் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்டோா் ராமாலை வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது வனப் பகுதியில் மான் இறைச்சி வைத்திருந்தவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா் கே.மோட்டூரைச் சோ்ந்த கண்ணன் மகன் சுந்தரம் (38) என்பதும், கம்பி வலையை விரித்து அதில் சிக்கி இறந்த மானின் இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து மான் இறைச்சி, மான் தோல், மானை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட பொருள்களை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட சுந்தரம், நீதிபதி முன்பு ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT