குடியாத்தம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
குடியாத்தத்தை அடுத்த கோவிந்தாபுரத்தைச் சோ்ந்த வனராஜ் என்பவரின் மகன் சங்கா்(45). எம்.இ.பட்டதாரியான இவா் பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். விடுமுறையில் ஊருக்கு வந்த அவா், உறவினா் பரத் என்பவருடன் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் குடியாத்தம் நோக்கி வந்துள்ளாா்.
அப்போது சென்றாம்பல்லியைச் சோ்ந்த குணசேகரன் (26), சிவா (27) இருவரும் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்துள்ளனா். இரு வாகனங்களும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனா். சங்கா், பரத் இருவரும் வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். குணசேகரன், சிவா இருவரும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். இவா்களில் சங்கா் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தாா்.
இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.