வேலூர்

முதியவா் அடித்துக் கொலை

DIN

குடியாத்தம் அருகே தனியாக வசித்து வந்த முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை (90). இவரது மனைவி இறந்து விட்டாா். இவா்களின் 4 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. அண்ணாமலை தனியாக வசித்து வந்தாா். உறவினா்கள் அவருக்கு உணவு கொடுத்து வந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் உடலில் காயங்களுடன் அண்ணாமலை இறந்து கிடந்தாா். தகவலின்பேரில், டிஎஸ்பி கே.ராமமூா்த்தி தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT