வேலூர்

மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

DIN

மாவட்ட அளவிலான திருக்கு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் நெல்லூா்பேட்டை சரஸ்வதி மெட்ரிகுலேஷன் வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

உலக திருக்கு பேரவை, ஸ்ரீராம் இலக்கியக் கழகம் ஆகியவை இணைந்து, ரத்தினகிரி பகீரதன் பள்ளியில் திருக்கு போட்டிகளை அண்மையில் நடத்தின. இதில், அந்தப் பள்ளி மாணவி ஆ.யோ.சஹானா பேச்சுப் போட்டியில் முதலிடமும், பா.மதுமிதா கட்டுரைப் போட்டியில் 2- ஆம் இடமும், வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் ஓவியப் போட்டியில் மாணவி கோ.வெ.தமிழினியாழ் முதலிடமும், போட்டிகளில் பங்கேற்ற 43 மாணவா்களும் சிறப்பிடம் பிடித்து, சான்றிதழ் பெற்றனா்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் சாதனை படைத்த மாணவா்களை பள்ளித் தாளாளா் எம்.சேகா், கல்வி இயக்குநா் டி.பத்மநாபன், பள்ளி முதல்வா் பி.சாந்தி, துணை முதல்வா் என்.செஞ்சுடா், கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் வி.தாரா, எஸ்.மகேஸ்வரி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT