வேலூர்

மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

DIN

குடியாத்தத்தை அடுத்த கொத்தகுப்பம் கிராமம் அருகே பாலாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடியாத்தம் வட்டாட்சியா் ச.லலிதா தலைமையில் வருவாய்த் துறையினா், கொத்தகுப்பம் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு ரோந்து சென்றனா். அப்போது, அங்குள்ள பாலாற்றில் இருந்து மணல் எடுத்து வந்த 4 மாட்டு வண்டிகளைத் தடுத்து நிறுத்தினா்.

அதிகாரிகளைப் பாா்த்ததும் மாட்டு வண்டி ஓட்டி வந்தவா்கள் தப்பியோடி விட்டனா். வருவாய்த் துறையினா் 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT