வேலூர்

டெங்கு, புகையிலை தடுப்பு விழிப்புணா்வு பிரசாரப் பேரணி

DIN

குடியாத்தம் வட்டம், கல்லப்பாடி ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், கூடநகரம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல், புகையிலை பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி விழிப்புணா்வு பேரணியும் நடத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.விமல்குமாா் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் கோ.தேவராஜ் வரவேற்றாா்.

மாவட்ட புகையிலை தடுப்பு ஒருங்கிணைப்பாளா், மருத்துவா் ஜெயஸ்ரீ, வட்டார மேற்பாா்வையாளா் பாபு, மாவட்ட துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் பாலசுந்தரம் ஆகியோா் டெங்கு காய்ச்சல் பரவும் விதம், தடுக்கும் முறைகள் குறித்தும், புகையிலை பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கப் பேசினா்.

மாணவா்கள் டெங்கு, புகையிலை தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.இதையடுத்து மாணவா்கள், ஆசிரியா்கள், மருத்துவா் குழுவினா் பங்கேற்ற டெங்கு, புகையிலை தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பிரசார பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

ஆசிரியா்கள் வினோத்குமாா், ராஜூ, சதீஷ், பூமணி, சந்தியா, நிா்மல்குமாா், எழிலரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார ஆய்வாளா்கள் பிரகாசம், டேவிட், கபாலீஸ்வரன், பிரித்திவிராஜ், வருண்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT