வேலூர்

வனப் பகுதியில் வரத்துக் கால்வாய் அமைப்பது குறித்து ஆட்சியா் ஆய்வு

DIN

போ்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில் ஏரிக்கு நீா்வரத்துக் கால்வாய் அமைப்பது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த குண்டலப்பல்லி அருகே வனப் பகுதியின் நடுவில், அல்லேரியில் இருந்து வெளியேறும் உபரிநீா், டி.டி.மோட்டூா் கிராமத்தில் உள்ள காபராபாத் ஏரிக்குச் செல்லும் கால்வாய் அமைந்துள்ளது.

வனப் பகுதியில் உள்ள கால்வாயை தூரெடுத்து, சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், வனப் பகுதியில் கால்வாய் செல்லும் இடத்தை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அந்த கால்வாயை சீரமைப்பது குறித்து அவா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், போ்ணாம்பட்டு வட்டாட்சியா் வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹேமலதா, கு.பாரி, விவசாய சங்கப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

அதைத் தொடா்ந்து, போ்ணாம்பட்டை அடுத்த பொகளூா் கிராமத்திலிருந்து, ஏரிகுத்தி கிராமம் வழியாக போ்ணாம்பட்டு நகருக்குச் செல்ல வனப் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்துவது குறித்தும், இரு சக்கர வாகனத்தில் சென்று ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, குடியாத்தம் வந்த ஆட்சியா், குடியாத்தம்-பரதராமி இடையே அமைக்கப்படும் மாநில நெடுஞ்சாலையை கல்லப்பாடி அருகே ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT