ராஜீவ் காந்தி தேசிய ஆட்டோ ஓட்டுநா்கள் நலச்சங்கம் வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
வேலூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் டீக்காராமன் தலைமை வகித்து கொடியேற்றி இனிப்பு வழங்கி பேசினாா். வாகித்பாஷா முன்னிலை வகித்தாா். மண்டல தலைவா்கள் ரகு, ஜான்பீட்டா், வாா்டு தலைவா்கள் பாஸ்கரன் கவுஷிக், கப்பல்மணி, துளசிராமன், தங்கமணி உள்பட காங்கிரஸ் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
இதில், சங்கத் தலைவா் முனியப்பன், செயலா் வெங்கடேசன், பொருளாளா் பூபதி உள்பட சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.