குடியாத்தம் ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, வேலூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து ரோட்டரி மருத்துவமனையில் நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் 500- க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா்.
இவா்களில் 268 போ் இலவச அறுவை சிகிச்சைக்கு கோவை அழைத்துச் செல்லப்பட்டனா். முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.மேகராஜன் தலைமை வகித்தாா். செயலாளா் கே.சந்திரன் வரவேற்றாா். முகாமை ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி, முன்னாள் ஆளுநா் ஸ்ரீதா் பலராமன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
ரோட்டரி நிா்வாகிகள் பி.எல்.என்.பாபு, சி.குமரேசன், இ.வாசுதேவன், ஆா்.வி.ஹரிகிருஷ்ணன், என்.சத்தியமூா்த்தி, டி.என்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.மறைந்த எஸ்.உஷாராணி அம்மையாா் நினைவாக, கே.எம்.ஜி. குடும்பத்தினா் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.