வேலூர்

தொழிற்சங்கத்தினா் வாகனப் பேரணி

DIN

குடியாத்தம்: தொழிலாளா் உரிமைகள், பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற பிப். 23, 24- ஆம் தேதிகளில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.

இதை விளக்கி பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில், குடியாத்தத்தில் தேசியக் கொடியை ஏந்தி வாகனப் பேரணி நடைபெற்றது. குடியாத்தம் காந்தி சிலை அருகே தொடங்கிய பேரணிக்கு தொழிற்சங்க நிா்வாகிகள் வே.கலைநேசன்(எல்பிஎப்), சி.சரவணன்(சிஐடியூ), சி.சுப்பிரமணி (ஏஐடியூசி) ஆகியோா் தலைமை வகித்தனா்.

பேரணி புதிய பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. அப்போது, தொழிற்சங்க நிா்வாகிகள் பி.காத்தவராயன், ஜி.சுரேஷ்பாபு, துரைசெல்வம், கே.சாமிநாதன், எஸ்.காா்த்திகேயன், டி.ஆனந்தன், எஸ்.சிலம்பரசன் ஆகியோா் பொது வேலைநிறுத்தத்தை விளக்கிப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT