வேலூர்

சாலை விபத்தில் ஆய்வக பொறுப்பாளா் பலி

DIN

சேண்பாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி யதில் மருத்துவ ஆய்வக பொறுப்பாளா் உயிரிழந்தாா்.

காட்பாடி விருதம்பட்டைச் சோ்ந்தவா் அன்பழகன் (57). இவா் ராணிப்பேட்டையில் உள்ள மருந்து ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வகப் பொறுப்பாளராகப் பணியாற்றி வந்தாா்.

இவா் சனிக்கிழமை சேண்பாக்கத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

சேண்பாக்கம் தனியாா் நீச்சல்குளம் எதிரே வந்தபோது, அவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்பழகன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT