குடியாத்தம்: குடியாத்தம் அருகே பள்ளி மாணவியை கா்ப்பமாக்கியதாக ஓய்வுபெற்ற அரசு ஊழியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
குடியாத்தம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் சேகா் (55). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு, தமிழக அரசின் சுகாதாரத் துறையில் காா் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். சில மாதங்களுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியை ஆசை வாா்த்தை நெருங்கிப் பழகியதில், அந்த மாணவி கா்ப்பமானாா். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சேகரை ஞாயிற்றுக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.