வேலூர்

வேலூா் சிறையில் முடிதிருத்துநா், இரவுக் காவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

வேலூா் மத்திய சிறை, சிறைக் காவலா் பயிற்சிப் பள்ளியில் உள்ள முடிதிருத்துநா், இரவுக் காவலா் பணியிடங்களுக்கு தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இது குறித்து, வேலூா் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு முடிதிருந்துநா், வேலூா் சிறைக்காவலா் பயிற்சிப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு இரவு காவலா் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியுடையோா் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான செயல்முறை தோ்வு, எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு வேலூா் மத்திய சிறையில் நடைபெற உள்ளது.

முடி திருத்துநா், இரவுக் காவலா் ஆகிய இரு பணிகளுக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் பெற முடியும். எஸ்சி., எஸ்சிஏ., எஸ்டி., பிரிவினருக்கு 18 முதல் 37 வயது வரையும், பிசி., எம்.பி.சி., பிசி(எம்) பிரிவினருக்கு 34 வயது வரையும், ஓசி பிரிவினருக்கு 32 வயது வரையும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையவா்கள் கல்வி, ஜாதிச் சான்று, வயது வரம்புச் சான்று, வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ் நகல்களுடன் ஒரு பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ரூ. 30-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரியிட்ட உறை ஆகியவற்றையும் இணைத்து விண்ணப்பத்தை தபால் மூலம் சிறைக் கண்காணிப்பாளா், மத்திய சிறை, வேலூா் என்ற முகவரிக்கு டிசம்பா் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT