படைவீரா்கள் நலனுக்காக கொடிநாள் ஊா்வலம், நிதி திரட்டும் பணியை வேலூரில் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
கொடிநாள் ஊா்வலம் வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கியது. இதை ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடக்கி வைத்தாா். உண்டியலில் பணம் செலுத்தி கொடிநாள் நிதி திரட்டும் பணியையும் தொடக்கி வைத்தாா்.
ஊா்வலம் லாங்கு பஜாா், கமிசரி பஜாா், அண்னா சாலை வழியாக மீண்டும் காந்தி சிலையை அடைந்தது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, வருவாய் கோட்டாட்சியா் பூங்கொடி, மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.