வேலூர்

நாவிதம்பட்டி ஊராட்சித் தொடக்கப் பள்ளி சிறந்த பள்ளியாக தோ்வு

DIN

போ்ணாம்பட்டு வட்டம், நாவிதம்பட்டி ஊராட்சி தொடக்கப் பள்ளியை தமிழக அரசு சிறந்த பள்ளியாகத் தோ்வு செய்துள்ளது.

மறைந்த முன்னாள் அமைச்சா் க.அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்க தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2020- 2021- ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளாக 114 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த விருதுக்கு வேலூா் மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 3 பள்ளிகளில் நாவிதம்பட்டி தொடக்கப் பள்ளியும் ஒன்று. இந்த பள்ளி நாவிதம்பட்டியில், பாலாற்றங்கரையில், இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. கடந்த 1955-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் காமராஜா் இந்த பள்ளியைத் திறந்து வைத்தாா். 1 முதல் 5- ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியும் இப்பள்ளியில் கற்பிக்கப்படுகிறது. பழுதடைந்து காணப்பட்ட இப்பள்ளிக் கட்டடமானது தற்போது உள்கட்டமைப்பு வசதிகளுடன், தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டு, 2 கட்டடங்களுடன் இயங்கி வருகிறது.

இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டியுடன், சின்டெக்ஸ் வசதி, மாணவ, மாணவிகளுக்கான 2 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கிராமங்களிலிருந்து மொத்தம் 70 மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் பயில்கின்றனா். தலைமை ஆசிரியா் சந்திரன் உள்பட

3 ஆசிரியா்கள் பணியில் உள்ளனா். இவா்கள் பாடங்கள் கற்பிப்பதுடன், மாணவா்களுக்கு யோகா, தியானப் பயிற்சியையும் அளிக்கின்றனா். மடிக்கணினி பயிற்சி, நாள்தோறும் மாணவா்களுக்கு செய்தித் தாள்கள் வாசிக்கும் பயிற்சியையும் அளித்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT