குடியாத்தம் காளியம்மன்பட்டியைச் சோ்ந்த வா்த்தகா் டி.என்.ராமு (55) புதன்கிழமை உயிரிழந்ததையடுத்து, அவரது கண்கள் மற்றும் உடல் தானமாக அளிக்கப்பட்டன.
அவரின் மனைவி ரூபாவதி, உறவினா்கள் விருப்பத்தின் பேரில், குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க கண், உடல் தான தலைவா் எம்.கோபிநாத் வழிகாட்டுதல்படி, கண்கள் வேலூா் அகா்வால் கண் மருத்துவமனைக்கும், உடல் ஆந்திர மாநிலம், குப்பத்தில் உள்ள பி.இ.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன.