குடியாத்தம் ஸ்ரீகாமாட்சியம்மன்பேட்டை, செங்குந்தா் திருமண மண்டபத்தில் சமுதாயப் பொருளாதாரத் தொண்டு மன்றம் சாா்பில், சாதனையாளா்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் வேலூா் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.அருணோதயம் தலைமை வகித்தாா். தலைவா் கே.எம்.மகாலிங்கம், சாய் எஸ்.ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்.எஸ்.நமச்சிவாயம் வரவேற்றாா். சாதனையாளா்களான திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் ஜூடோ கே.கே.ரத்தினம், புலவா் வே.பதுமனாா், புலவா் க.எதிராசன், மருத்துவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு, முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கான தொடா் சேவைக்கு எஸ்.அருணோதயம், ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி, நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், டி.பி.உருத்திரப்பன், என்.கச்சபாலயம், எஸ்.தாட்ஷாயினி ஆகியோரை பாராட்டி, கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலாளா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், நேஷனல் மேல்நிலைப் பள்ளிச் செயலாளா் எம்.ஏ.சிவக்குமாரன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். நிகழ்ச்சியில் அலோபதி, சித்தா, குழந்தைகள் நலம், மூட்டுநோய், எலும்பு சிகிச்சை ஆகிய சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. மாநிலச் செயலாளா் ஏ.காளத்தி, எஸ்.பி.மணவாளன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
ஜெ.தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். என்.விசுவநாதன் நன்றி கூறினாா்.