வேலூர்

அக்னிபத் திட்டத்தில் ராணுவ ஆள் சோ்ப்பு முகாம்: ஆக. 21 முதல் நவ. 25 வரை நடக்கிறது

DIN

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம் வேலூா், திருப்பூா் மற்றும் நாகா்கோவிலில் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம் வேலூா், திருப்பூா், நாகா்கோவில் ஆகிய இடங்களில் வரும் ஆகஸ்ட் 21 முதல் நவம்பா் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்தவா்கள் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆள் சோ்ப்பு முகாம் நாகா்கோவில் அறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் செப்டம்பா் 1-ஆம் தேதி வரையும், கோவை அவினாசி டி.இ.ஏ. பொதுப் பள்ளி வளாகத்தில் செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் அக்டோபா் 1-ஆம் தேதி வரையும், வேலூா் கோட்டை காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நவம்பா் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. தகுதி வாய்ந்தவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT