வேலூர்

இன்று கரோனா தடுப்பூசி முகாம்: உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

வேலூா் மாவட்டத்தில் ஆயிரம் இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் அதிகப்படியான நபா்களை பங்கேற்கச் செய்து தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் 6-ஆவது முறையாக கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடத்தப் பட உள்ளது. வேலூா் மாவட்டம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களை ஒன்றிணைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைத்து வரவேண்டும். தங்களின் சாா்பாக முகாமுக்கு குறைந்தபட்சம் ஒரு ஊராட்சிக்கு 200 பேருக்கு குறையாமல் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்திட வேண்டும்.

ஊரக பகுதிகளில் அதிகப்படியான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தி கொண்டவா்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியரின் பாராட்டு சான்றிதழ் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT