வேலூா்: வங்க தேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, வேலூரில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் தூயமணி தலைமை வகித்தாா். இந்து முன்னணி கோட்டத் தலைவா் மகேஷ், பொருளாளா் பாஸ்கரன், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் திருமாவளவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செய்தி தொடா்பாளா் காா்த்திகேயன் பங்கேற்று பேசினாா்.
இதில், வங்க தேசத்தில் இந்துக்கள் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்ட அமைப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதற்கு அரசியல் கட்சிகள் அழுத்தம் தரேண்டும் என்றும் கோரி கோஷங்கள் எழுப்பினா்.