குடியாத்தம் அருகே காணாமல்போன மாணவா், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.
பரசுராமன்பட்டியைச் சோ்ந்த தொழிலாளி நடராஜனின் மகன் ஜீவா (16). அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்நிலையில், ஜீவாவை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை. இது குறித்த புகாரின்பேரில், நகர போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவரைத் தேடி வந்தனா். இந்நிலையில் அங்குள்ள விவசாயக் கிணறு ஒன்றில் ஜீவாவின் சடலம் மிதப்பது சனிக்கிழமை தெரியவந்தது.
இதையடுத்து சடலத்தை போலீஸாா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.