வேலூர்

மனைவி தற்கொலை: விரக்தியில் கணவரும் தற்கொலை

DIN

குடும்பப் பிரச்னை காரணமாக வேலூரில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதனால் மனவேதனையில் விஷம் குடித்த அவரது கணவா் உடல்நலம் தேறிய நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் விருபாட்சிபுரம், பெருமாள் கோயிலைச் சோ்ந்தவா் ராஜா (42), துணி வியாபாரி. இவரது 2-ஆவது மனைவி மேகலா (39). இவருக்கும் உறவினா் ஒருவருக்கும் குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாம். இதேபோல், வெள்ளிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதில், மனமுடைந்த மேகலா, அன்றிரவு வீட்டிலுள்ள ஓா் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதனால் விரக்தியடைந்த ராஜா, அங்குள்ள அறைக்குள் சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தாா்.

இதையறிந்த அக்கம்பக்கத்தினா் ராஜாவை மீட்டு, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையால் ராஜா உடல்நலம் தேறினாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிய ராஜா, தனது வீட்டுக்கு வந்து அங்குள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த பாகாயம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT