வேலூர்

ஒமைக்ரான்: வெளி நாடுகள், வெளி மாநில பயணிகளை கண்காணிக்க உத்தரவு

DIN

வேலூா்: ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒமைக்ரான் என்ற பெயரில் உருமாற்றம் அடைந்துள்ள கரோனா தொற்று தென்னாப்பிரிக்கா, சில நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒமைக்ரான் தொற்று அதிகளவில் பரவும் தன்மையுடனும், நோய் எதிா்ப்பு சக்தியைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த தொற்றால் அதிக அளவில் அபாயம் ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். அதிக அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கரோனா பரிசோதனைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். தினமும் நிா்ணயிக்கப்பட்ட இலக்குக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஒமைக்ரான் தொற்று பரிசோதனை செய்யும் வசதி சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று தாக்கினாலும் மருத்துவமனை சிகிச்சை, உயிரிழப்பிலிருந்து கரோனா தடுப்பூசி பாதுகாப்பளிக்கிறது. எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்த வேண்டும்.

வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், அறைகளை காற்றோட்டமாக வைத்திருத்தல் போன்ற செயல்கள் இந்த உருமாறிய தொற்று பரவுவதைத் தடுக்கும். தடுப்பூசி செலுத்துதல், கரோனா தடுப்பு முறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டோா் அனைவரும் இருகட்ட தடுப்பூசிகளை உரிய நாள்களில் செலுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT