வேலூர்

ரூ.9 கோடியில் புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை

DIN

போ்ணாம்பட்டில் ரூ.9.81 கோடியில் புதிய கட்டடங்கள் கட்ட வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடத்தப்பட்டது.

போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில், 22 ஆயிரம் சதுர அடியில் புறநோயாளிகள் பிரிவு ரூ.7.58 கோடியிலும், மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளுடன் ரூ.2.23 கோடியில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் இதற்கான பூமி பூஜையைத் தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் ஆவின் தலைவா் த.வேலழகன், மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குநா் செல்வகுமாா், பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் தேவன், உதவிப் பொறியாளா் ராஜாமணி, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் திருஞானம், நிலவள வங்கித் தலைவா் எல்.சீனிவாசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் டி.பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT