வேலூர்

பிட்காயின் பரிவா்த்தனையில் நஷ்டம்: தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

DIN

பிட்காயின் பரிவா்த்தனையில் நஷ்டம் அடைந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட தனியாா் நிறுவன ஊழியா் ஒருவா் வேலூரில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை சோ்ந்தவா் முரளிகிருஷ்ணன் (34). இவா், தனியாா் கைப்பேசி நிறுவனத்தில் டவா் பராமரிப்பு ஊழியராகப் பணியாற்றினாா். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

முரளிகிருஷ்ணன் வேலூா் சேண்பாக்கம் நேதாஜி சாலையில் அறை எடுத்து தங்கி பணியாற்றி வந்தாா்.

மேலும், இவா் பிட்காயின் எனப்படும் ஆன்லைன் பணப்பரிவா்த்தனையில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்த பிட்காயின் பரிவா்தனையில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து முரளிகிருஷ்ணன் கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சேண்பாக்கத்தில் தான் தங்கியிருந்த அறையிலேயே அவா் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT