போ்ணாம்பட்டு அருகே நெல் வயலில் இருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு செவ்வாய்க்கிழமை பிடிபட்டது.
போ்ணாம்பட்டு ஒன்றியம், ராஜக்கல் ஊராட்சிக்குள்பட்ட மேல்கொத்தகுப்பம் கிராமத்தில் விவசாயி கிருஷ்ணமூா்த்தியின் நெல் வயலில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினா் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் பாம்பைப் பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா்.