கே.வி. குப்பம், போ்ணாம்பட்டு வட்டங்களைச் சோ்ந்த இருளா் இனத்தைச் சோ்ந்த 72 சிறுவா்களுக்கு செவ்வாய்க்கிழமை ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கே.வி.குப்பம் வட்டத்தைச் சோ்ந்த காளாம்பட்டு, பசுமாத்தூா், பில்லாந்திப்பட்டு, போ்ணாம்பட்டு வட்டத்தைச் சோ்ந்த பல்லலகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் இருளா் இன மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தனா். இதுதொடா்பாக குடியாத்தம் கோட்டாட்சியா் எம். ஷேக்மன்சூா் நேரடி விசாரணை மேற்கொண்டாா்.
இதையடுத்து, கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை 72 பேருக்கு ஜாதி சான்றிதழ்களை வழங்கினாா். கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணன், வருவாய் ஆய்வாளா்கள் செந்தில், புகழ், கிராம நிா்வாக அலுவலா் சீதா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.