வேலூர்

வேலூா் மாவட்டத்தில் மேலும் 144 பேருக்கு கரோனா

DIN

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு வெள்ளிக்கிழமை வரை 14,257 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 144 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,401-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, மாவட்டத்தில் இதுவரை 13,025 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இம்மாவட்டத்தில் தொற்றால் 221 போ் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 52 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,740-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 12,108 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 475 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 157 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 67 பேருக்கு தொற்று

திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 4,635 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 67 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,703-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 4,033 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 583 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இம்மாவட்டத்தில் 86 போ் உயிரிழந்துள்ளனா்.

ஜோலாா்பேட்டை பகுதியில் அம்மா உணவகத்தில் பணிபுரியும் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அம்மா உணவகம் சனிக்கிழமை மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT