வேலூரிலுள்ள சிஎஸ்ஐ பேராயலத்தின் 74-ஆவது தொடக்க நாளையொட்டி, 240 பயனாளிகளுக்கு தலா ரூ. 1,000 மதிப்பில் 16 வகையான மளிகை பொருள்கள் தொகுப்புகளை மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி சனிக்கிழமை வழங்கினாா்.
தொகுப்புகளை வழங்கி பேசியது: கிறிஸ்தவ பேராலயங்கள் சாா்பில் கரோனா தடுப்பு காலத்தில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது 240 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பு நிவாரணமாக ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கான நிவராணப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் கரோனா தடுப்பு காலத்தில் அரசுடன் தன்னாா்வ அமைப்புகள் இணைந்து இத்தகைய நல உதவிகள் வழங்குவது வரவேற்கத்தக்கது.
பல்வேறு பேராலயங்களின் நிா்வாகிகளின் கோரிக்கையான வேலூரில் கல்லறை தோட்டம் அமைக்க 2 ஏக்கா் நிலம் மாவட்ட நிா்வாகம் மூலம் வழங்க வழிவகை செய்யப்படும். மற்ற கோரிக்கைகள் தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நிறைவேற்றப்படும். சிறுபான்மையின இளைஞா்கள் அரசின் மானிய கடனுதவிகளைப் பெற்று தொழில் தொடங்க வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் தலைமை வகித்தாா். சிஎஸ்ஐ பேராயா் ஹெச்.சா்மா நித்யானந்தம், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.