வேலூர்

வேலூா் மாவட்டத்தில் மேலும் 157 பேருக்கு கரோனா

DIN

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு வியாழக்கிழமை வரை 14,100 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை புதிதாக 157 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,257-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, மாவட்டத்தில் இதுவரை 12,870 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இம்மாவட்டத்தில் இதுவரை 214 போ் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 60 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,688-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 12,052 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 480 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 156 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 67 பேருக்கு தொற்று

திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 4,569 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 67 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,636-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 3,950 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 601 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 85 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT