வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் வரும் 28-ஆம் தேதி வெறிநாய்க் கடிக்கு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலக வெறிநாய்க் கடி தடுப்பூசி தினத்தையொட்டி, வேலூா் மாவட்டத்தில் செப்.28-ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படும் 41 கால்நடை மருந்தகங்கள், 4 கால்நடை மருத்துவமனைகள், ஒரு பன்முக மருத்துவமனை ஆகியவற்றில் இந்த முகாம் நடைபெறும்.
கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஜெ.நவநீதகிருஷ்ணன், உதவி இயக்குநா் ஜி.அந்துவன் மேற்பாா்வையில் நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.