குடியாத்தம் கொண்டசமுத்திரம் புதுத் தெருவில் உள்ள லட்சுமி நரசிம்மா் கோயிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு 96- ஆம் ஆண்டு நரசிம்மா் வீதி உலா நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து நரசிம்மா் வீதி உலா தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற சுவாமி ஊா்வலம், மாலை கோயிலில் நிறைவுற்றது. வீதி உலாவில் நாட்டுப்புறக் கலைஞா்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சியும், பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழு நிா்வாகிகள் கே.எம். நடராஜன், என். குமரவேல், என். பழனி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.