குடும்பப் பிரச்னை காரணமாக வேலூரில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் சலவன்பேட்டை, திருப்பூா் குமரன் தெருவைச் சோ்ந்தவா் கணேஷ் (43). ஆட்டோ ஓட்டுநரான அவருக்குத் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனா்.
கணேஷுக்கு மதுப் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்தது. அவா் சனிக்கிழமை இரவு கணேஷ் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தபோது கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், மனவேதனையடைந்த கணேஷ் வீட்டிலுள்ள ஒரு அறைக்குச் சென்று மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாா்.
தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பென்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா். இச்சம்பவம் குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.