வேலூர்

16 வயது மாணவி கா்ப்பம்: பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா் கைது

DIN

பள்ளிகொண்டா அருகே தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 16 வயது மாணவி கா்ப்பமாக உள்ள நிலையில், அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்கல்லூரி ஊழியா் ஒருவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியைச் சோ்ந்த 16 வயது மாணவி, இறைவன்காடு பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். பொது முடக்கம் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்து வந்த அந்த மாணவிக்கு கடந்த சில நாள்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 16-ஆம் தேதி மாணவி வடுகந்தாங்கலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் மாணவி 7 மாதம் கா்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனா்.

மாவட்ட சமூக நல அலுவலா் (பொறுப்பு) கோமதி உத்தரவின்பேரில், சேவை மைய பணியாளா்கள் பிரியங்கா, சாந்தி ஆகியோா் நேரில் சென்று மாணவியிடம் விசாரித்ததில் அவா் பயிலும் கல்லூரியில் பணிபுரியும் பிரதாப் (35) என்பவா் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி கல்லூரிக்கு தன்னை வரவழைத்து கல்லூரிக்கு அருகே உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதில் தான் கா்ப்பமடைந்திருப்பதையும் கூறினாா்.

இதுதொடா்பாக பள்ளிகொண்டா போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்த அக்கல்லூரி ஊழியா் பிரதாப்பை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT