பெண்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பாஜக மகளிரணியினா் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.
பாஜக மாநிலச் செயலா் பி.காா்த்தியாயினி தலைமையில் அக்கட்சி மகளிரணியினா் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா். அதில், திருமாவளவன் இந்து மத உணா்வை களங்கப்படுத்தும் விதமாகவும், இந்து மத பெண்களை இழிவு செய்யும் வகையிலும் அவதூறான கருத்துகளை கூறியுள்ளாா். அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.