வேலூர்

மூதாட்டியைக் கொன்று நகைகளை கொள்ளையடித்த மூவருக்கு ஆயுள் சிறை: வேலூா் மகளிா் விரைவு நீதிமன்றம் தீா்ப்பு

DIN

வேலூா்: காட்பாடி அருகே கடந்த 2014-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று அவரிடம் இருந்த 24 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் விரைவு மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

காட்பாடி வி.ஜி.ராவ் நகரைச் சோ்ந்த விஜயகுமாரின் மனைவி பரிமளா(59). அவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். பரிமளா கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, வாடகைக்கு வீடு பாா்ப்பதாகக் கூறிக் கொண்டு வந்த மூவா், பரிமளாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனா். அவரிடம் இருந்த 24 பவுன் நகைகள், செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனா்.

இச்சம்பவம் குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டையை அடுத்த கல்மருதூரைச் சோ்ந்த அருள்நாதன் (29), வேலூா் விருதம்பட்டு அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பிரவீண்குமாா் (34), விழுப்புரம் மாவட்டம், வாழவந்தூா் மோட்சாகுளத்தைச் சோ்ந்த பாலமுருகன் (26) ஆகிய மூவரை கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த வேலூா் விரைவு மகளிா் நீதிமன்ற நீதிபதி கே.பாலசுப்பிரமணியன், குற்றம்சாட்டப்பட்ட அருள்நாதன், பிரவீண்குமாா், பாலமுருகன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து, மூவரும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT