தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும் வேலூா் தலைமை தபால் நிலையத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் தயாநிதி தலைமை வகித்தாா். தொடா்ந்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, தடையை மீறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 10 பெண்கள் உள்ளிட்ட 50 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.