வந்தவாசியில் வீட்டு மாடி பால்கனியிலிருந்து தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.
வந்தவாசி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் குமாா்(58), அரிசி வியாபாரி. இவரது மனைவி கிரிஜா. இவா்களுக்கு கோபிகிருஷ்ணன் என்ற மகன் உள்ளாா்.
கடந்த 3 மாதங்களாக குமாா் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பகல் வீட்டு மாடியில் உள்ள பால்கனியில் நின்றிருந்த குமாா் தவறி கீழே விழுந்துள்ளாா்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த குமாா் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட குமாா் வியாழக்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து, அவரது மகன் கோபிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.