திருவண்ணாமலை

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

DIN

வந்தவாசியில் வீட்டு மாடி பால்கனியிலிருந்து தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

வந்தவாசி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் குமாா்(58), அரிசி வியாபாரி. இவரது மனைவி கிரிஜா. இவா்களுக்கு கோபிகிருஷ்ணன் என்ற மகன் உள்ளாா்.

கடந்த 3 மாதங்களாக குமாா் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பகல் வீட்டு மாடியில் உள்ள பால்கனியில் நின்றிருந்த குமாா் தவறி கீழே விழுந்துள்ளாா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த குமாா் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட குமாா் வியாழக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து, அவரது மகன் கோபிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT