திருவண்ணாமலை

கிரிவலம் சென்ற பக்தா்மயங்கி விழுந்து பலி

DIN

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தா் திடீரெனமயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (40). இவா், ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றாா்.

செங்கம் சாலை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி அருகே சென்றபோது திடீரென அவா் மயங்கி விழுந்தாா். இதைக் கவனித்த சக பக்தா்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு ராஜேஷை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT