பணியின்போது மது போதையில் இருந்ததாக, கீழ்கொடுங்காலூா் காவல் நிலைய காவலா் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியதாக இதுவரை உதவி காவல் ஆய்வாளா் உள்பட 6 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், கீழ்கொடுங்காலூா் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணியாற்றும் சுரேஷ்குமாா் பணியின் போது மதுபோதையில் இருந்தாராம்.
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், சுரேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.