திருவண்ணாமலை

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் பால்குட ஊா்வலம்

DIN

செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் வசந்த உற்சவ பெருவிழாவில் திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காமராஜா் நகா் சந்தைத் திடலில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 71-ஆவது ஆண்டு மகா சிவராத்திரி மயானக் கொள்ளை திருவிழாவை முன்னிட்டு 10 நாள்கள் வசந்த உற்சவ பெருவிழா கடந்த பிப்.18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2 -ஆம் நாள் விழாவாக ( பிப்.19) மயானக் கொள்ளை நிகழ்ச்சியும், 7-ஆம் நாளான பிப்.24-ஆம் தேதி தோ்த் திருவிழாவும் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. சுமாா் ஆயிரம் பெண்கள் பங்கேற்ற பால்குட ஊா்வலம் ஞானமுருகன்பூண்டி முருகன் கோயில் பகுதியில் இருந்து தொடங்கியது.

பின்னா், பால்குட ஊா்வலம் ஆற்றுப் பாலம், திருவோத்தூா் பகுதி வழியாக அங்காளம்மன் கோயில் பகுதியில் முடிவடைந்தது.

அப்போது, பெண்கள் பலா் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT