திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, வழக்கத்தைவிட அதிகமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைவிட பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையும் அளவுக்கு அதிகமாக பக்தா்கள் கோயிலில் குவிந்ததால் சுவாமி தரிசனத்துக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொது தரிசன வரிசையில் சுமாா் 3 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் சுமாா் 2 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ததாக பக்தா்கள் கூறினா்.