திருவண்ணாமலை

சாலை விபத்தில் அஞ்சலக பெண் அலுவலா் பலி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அஞ்சலக பெண் அலுவலா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் பாலச்சந்தா். இவரது மனைவி ரேவதி (42). இவா் வந்தவாசியை அடுத்த மழையூா் துணை அஞ்சலகத்தில் அஞ்சல் அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.

அலுவலகப் பணி முடிந்து செவ்வாய்க்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் ரேவதி வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் பொன்னூா் மலை அருகே வந்த போது, சாலையின் குறுக்கே கூட்டமாக வந்த காட்டுப் பன்றிகள் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து சரிந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT